Thursday, October 27, 2011

தூது!!!

செப்பாத சொல்லின் 
கோடி அர்த்தங்களை 
மௌனம்
பேசி விடுகிறது!!

கூறா மொழிகளின்
கூற்றற்ற மௌனத்தின்
கூக்குரல் இசையை 
இரு விழிகள்
இசை(மை)த்து விடுகின்றன!!



மௌனம் பேசாத,
இரு விழிகள் இசைக்காத 
இன்னும் புரியாத 
எண்ணங்களை 
சொல்வதற்கு - நான் 
அனுப்பும் தூதே 
கண்ணில்
கரை தேடும் 
கண்ணீர் துளிகள்!!

No comments:

Post a Comment