Thursday, October 27, 2011
Saturday, October 1, 2011
அமரன் !!
அகிலமதில்,
ஆயிரமாயிரம்
ஆண்களிடையில்,
தொலைத்துவிட்டேன் அவனை !
அருகிருந்தும்
அனைத்தும் என்னில்
அறிந்திருந்தும்
அன்பால் தினமும்
அணைத்திருந்தும்,
தொலைத்துவிட்டேன் அவனை !
அலைக்கடலில்
அகப்பட்ட
அருந்துகளாய்
அரை நொடியில்
தொலைத்துவிட்டேன்
என் ஆண் மகனை !
அண்மையில் அமர்ந்திருந்து - என்
பெண்மையில் பூப்பூத்தவனின்
கண்கள் கண்ணீர்
கொண்டிருந்தும்
இயற்கையாய் அன்பொன்றை
இதயவறையில்
இல்லறம் செய்வித்த
இனியவனை,
இளமையின் ஊசலாட்டத்தில்
இதயமது இடம் மாற,
செல்வத்தில்
பிறந்தவன் கண்டு
கண்களது குருடாக,
தொலைத்துவிட்டேன்
அரிய ஆண் மகனை !
உள்ளத்தில்
உயிர் வாழும்
உந்தன்
நினைவுகள் ஜபிக்கிறது !
தொலைத்துவிட்டாலும்
நீ என்றுமே
என் அன்பின் அமரன் என்று !
Subscribe to:
Posts (Atom)

