Thursday, October 27, 2011

தூது!!!

செப்பாத சொல்லின் 
கோடி அர்த்தங்களை 
மௌனம்
பேசி விடுகிறது!!

கூறா மொழிகளின்
கூற்றற்ற மௌனத்தின்
கூக்குரல் இசையை 
இரு விழிகள்
இசை(மை)த்து விடுகின்றன!!



மௌனம் பேசாத,
இரு விழிகள் இசைக்காத 
இன்னும் புரியாத 
எண்ணங்களை 
சொல்வதற்கு - நான் 
அனுப்பும் தூதே 
கண்ணில்
கரை தேடும் 
கண்ணீர் துளிகள்!!

Saturday, October 1, 2011

அமரன் !!


அகிலமதில்,
ஆயிரமாயிரம் 
ஆண்களிடையில்,

தொலைத்துவிட்டேன் அவனை !

அருகிருந்தும் 
அனைத்தும் என்னில் 
அறிந்திருந்தும் 
அன்பால் தினமும் 
அணைத்திருந்தும்,

தொலைத்துவிட்டேன் அவனை !

அலைக்கடலில் 
அகப்பட்ட 
அருந்துகளாய் 
அரை நொடியில் 

தொலைத்துவிட்டேன் 
என் ஆண் மகனை !

அண்மையில் அமர்ந்திருந்து - என்
பெண்மையில் பூப்பூத்தவனின்
கண்கள் கண்ணீர்
கொண்டிருந்தும்

தொலைத்துவிட்டேன் அவனை !


இயற்கையாய் அன்பொன்றை
இதயவறையில் 
இல்லறம் செய்வித்த 
இனியவனை,

இளமையின் ஊசலாட்டத்தில் 
இதயமது இடம் மாற,
செல்வத்தில் 
பிறந்தவன் கண்டு 
கண்களது குருடாக,

தொலைத்துவிட்டேன் 
அரிய ஆண் மகனை !

உள்ளத்தில் 
உயிர் வாழும்
உந்தன்
நினைவுகள் ஜபிக்கிறது !

தொலைத்துவிட்டாலும் 
நீ என்றுமே 
என் அன்பின் அமரன்  என்று !