கண்கள் -
கவிதைகளின் கதை கூடம்!
கூந்தல் -
கருமை நிறத்திலொரு நயாகரா!
கண்ணம் -
மலர்கள் உறங்கும் மென்படுக்கை!
உதடு -
உயிரை உருக்கும் செந்தகடு!
செவிகள் -
சமுத்திரம் சொக்கிப்போகும் கடற்குதிரை!
கழுத்து -
தேன் உமிழும் தங்கக்கிண்ணம்!
இடை -
ஸ்வரங்கள் வாசிக்கும் வீணை!
பாதம் -
புவியை உறவாடும் மேகங்கள்!
அவள் -
என் ஆறடி ஆளும் அன்பதிசயம்!

