Friday, September 30, 2011

அவள்!


கண்கள் - 
கவிதைகளின் கதை கூடம்!

கூந்தல் - 
கருமை நிறத்திலொரு நயாகரா!

கண்ணம் - 
மலர்கள் உறங்கும் மென்படுக்கை!

உதடு - 
உயிரை உருக்கும் செந்தகடு!

செவிகள் - 
சமுத்திரம் சொக்கிப்போகும் கடற்குதிரை!

கழுத்து - 
தேன் உமிழும் தங்கக்கிண்ணம்!

இடை - 
ஸ்வரங்கள் வாசிக்கும் வீணை!

பாதம் - 
புவியை உறவாடும் மேகங்கள்!

அவள் - 
என் ஆறடி ஆளும் அன்பதிசயம்!

No comments:

Post a Comment